சாதிய, மத வாதங்களை ஒழிக்க உறுதிமொழி: பிரதமர் மோடி வேண்டுகோள்

சாதிய, மத வாதங்களை ஒழிக்க உறுதிமொழி: பிரதமர் மோடி வேண்டுகோள்

சாதிய, மத வாதங்களை ஒழிக்க உறுதிமொழி: பிரதமர் மோடி வேண்டுகோள்
Published on

இந்தியாவிலிருந்து சாதிய, மத வாதங்களை ஒழிக்க மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டுமென பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ஜிஎஸ்டி வரியால் ஏழை மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் விலை குறைந்துள்ளதாக பலரும் தன்னிடம் கூறுவதாகவும் இது திருப்தி தருகிறது என்றும் தெரிவித்தார். ஜிஎஸ்டியை வெறும் வரி சீர்திருத்தம் எனக் கூறுவதை தாண்டி கலாச்சார மாற்றம் என்றே பார்க்கலாம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இந்தியாவிலிருந்து சாதிய, மத வாதங்களை ஒழிக்க மக்கள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமைகளில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுடன் வானொலியில் உரையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com