5 மதத்தினர் சேர்ந்து எழுப்பிய மணியோசை

5 மதத்தினர் சேர்ந்து எழுப்பிய மணியோசை
5 மதத்தினர் சேர்ந்து எழுப்பிய மணியோசை

காஷ்மீரின் கிறிஸ்துவ தேவாலயத்தில், 5 மதத்தினர் இணைந்து மணியோசை எழுப்பிய மத நல்லிணக்க நிகழ்வு நடைபெற்றது. 

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ளது, 121 ஆண்டு பழமையான கிறிஸ்துவ தேவாலயம். இங்குள்ள பெரிய மணி 50 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதனால் தற்போது தேவாலயத்தில் புதிய மணி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மணியை இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த மதத்தை சேர்ந்த ஐவர், மணியோசை எழுப்பி தொடக்கி வைத்தனர். மேலும் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் பிற மதத்தினரையும் மணியோசை தொடக்க விழாவுக்கு அழைத்ததாக தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.ரத் தெரிவித்துள்ளார். ஐந்து மதத்தினர் இணைந்து நடத்திய இந்த மத நல்லிணக்க விழா அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. 
 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com