\
ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது

ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது

ஓய்வூதிய திட்டத்தில் சேர வயது வரம்பு உயர்கிறது
Published on

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதற்கான வயது வரம்பை அதிகரிக்க ஓய்வூதிய முறைப்படுத்தும் அமைப்பான PFRDA திட்டமிட்டுள்ளது.

NPS எனப்படும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேர இப்போதைய அதிகபட்ச வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை 5 ஆண்டுகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 70 வயது வரை ஓய்வூதிய திட்டத்தில் பணம் செலுத்த அனுமதிக்கவும் பரிசீலிக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஓய்வுக்கால நிதிப் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டத்தில் சேர்வதற்கான வயது வரம்பு அதிகரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com