''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்

''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்
''எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி'' - இஸ்ரோ ட்வீட்

நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இஸ்ரோவுடன் சேர்ந்து நாசாவும் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் நாம் தொடர்ந்து முன்னேறுவோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக் ட்வீட் செய்துள்ள இஸ்ரோ, ''எங்களுடன் துணைநிற்பதற்கு நன்றி. உலகெங்கிலும் உள்ள இந்தியர்களின் நம்பிக்கைகள் மற்றும் கனவுகளால் உந்தப்பட்டு நாங்கள் தொடர்ந்து முன்னேறுவோம்'' என தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com