காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் 3 வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 வீரர்கள் காயமடைந்துள்ளனர். 

ஜம்மூ காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் முகாமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதிகாலை 2 மணியளவில் இந்த தாக்குதல் சம்பவம் நடைப்பெற்றுள்ளது.

இத்தாக்குதலில் காயமடைந்த 3 வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com