குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் - ‘ஜெய்ஷ் இ முகமது’ பயங்கரவாதிகள் ஐவர் கைது

குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் - ‘ஜெய்ஷ் இ முகமது’ பயங்கரவாதிகள் ஐவர் கைது
குடியரசு தினத்தன்று தாக்குதல் நடத்த திட்டம் - ‘ஜெய்ஷ் இ முகமது’ பயங்கரவாதிகள் ஐவர் கைது

குடியரசு தினத்தன்று மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீநகர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே நடந்த பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து மத்திய காஷ்மீரில் காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குடியரசு தினத்தன்று மாபெரும் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்துள்ளது.

ஐவரிடம் இருந்தும் வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதல்களிலும் இவர்களுக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com