தெலுங்கானாவில் பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

தெலுங்கானாவில் பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
தெலுங்கானாவில் பட்டப்படிப்பு, முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் அனைத்து பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில உயர் கல்வி கவுன்சிலின் தலைவரும், பேராசிரியருமான டி. பாப்பி ரெட்டி தெரிவித்துள்ளார்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள செமஸ்டருக்கான புதிய தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். உசுமானியா பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 

அந்த மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக தெலுங்கானா அரசு பெற்றோர்களின் கேள்வி எழுப்பியதை அடுத்து பள்ளிகளை மூடி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com