'இரண்டாவதும் பெண் குழந்தை'  பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்

'இரண்டாவதும் பெண் குழந்தை'  பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்
'இரண்டாவதும் பெண் குழந்தை'  பெற்ற பிள்ளையை தந்தையே கொன்ற கொடூரம்

இரண்டாவது குழந்தையும் பெண் பிள்ளையாக பிறந்ததால், அதனை தந்தை கொன்று உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தெலங்கானா மாநிலத்தின் பத்ராத்ரி கொத்தகுடம் பகுதியைச் சேர்ந்தவர் அடபாலா சூர்யா தேஜா(30). இவருக்கும் இவரது மனைவிக்கும் ஏற்கெனவே ஒன்றரை வயதான பெண் குழந்தை உள்ளது. இந்த தம்பதிக்கு கடந்த மாதம் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததால் தேஜா அதிருப்தியில் இருந்துள்ளார். 

இந்நிலையில் நேற்று இரவு தேஜா தனது இரண்டாவது பெண் குழந்தையை நீரில் முக்கி கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறை ஆய்வாளர் ரெகுன்டா, “சூர்யா தேஜாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அவர் அதிருப்தியில் இருந்துள்ளார். இதனால் அவர் தனது குழந்தையை பார்க்க சில நாட்களாக வரவில்லை. எனினும் நேற்று அவர் தனது மனைவியின் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு தனது குழந்தையை பார்த்துள்ளார். இரவில் தேஜாவின் மனைவி குழந்தையை அறையில் காணவில்லை எனத் தேடியுள்ளார். 

அப்போது அவர்களின் வீட்டிற்கு வெளியே உள்ள குழியல் தொட்டியில் நீரில் குழந்தையின் சடலம் மிதந்துள்ளது. இதனையடுத்து தேஜா மனைவியின் உறவினர்கள் தேஜாவை பிடித்து விசாரித்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரை பிடித்து எங்களிடம் ஒப்படைத்தனர். நாங்கள் நடத்திய விசாரணையில் தேஜா தனது குழந்தையை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com