தூரத்தில் நானிருந்தாலும்... - கொரோனா விழிப்புணர்வு கவிதை எழுதிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தூரத்தில் நானிருந்தாலும்... - கொரோனா விழிப்புணர்வு கவிதை எழுதிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

தூரத்தில் நானிருந்தாலும்... - கொரோனா விழிப்புணர்வு கவிதை எழுதிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை
Published on

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிராக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் கொரோனா குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கொரோனா விழிப்புணர்வு கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.

தூரத்தில் நானிருந்தாலும்
சென்னையை துரத்தும் கரோனா
என்னைக் கவலையடையச் செய்கிறது...

கட்டாயம் வீட்டில் இருங்கள் என்றால்
கட்டுக்கடங்காமல் தெருவில் இறங்குகிறீர்கள்...

அங்கேயே வீட்டில் இருங்கள் என்றால்
அங்காடிக்குச் செல்கிறோம் என்கிறீர்கள்...

கடைபிடியுங்கள் கட்டுப்பாடுகளை என்றால்
கடைக்குப் போகிறேன் என்று கிளம்புகிறீர்கள்...

ஊரடங்கைக் கடைபிடியுங்கள் என்றால்
ஊருக்குப் போகிறேன் அவசியம் என்கிறீர்கள்...

முகக்கவசம் அணியுங்கள் என்றால்
மூச்சு முட்டுகிறது முடியாதென்கிறீர்கள்...

சமூக இடைவெளி வேண்டும் என்றால்
சங்கடம் இடையில் இது எதற்கு என்கிறீர்கள்...

கை கழுவுங்கள் அடிக்கடி என்றால்
கை கழுவுகிறீர்கள்! அவ்வேண்டுகோளை?

கரோனா கேட்கிறது...
அடங்காமல் நீங்கள் இருந்துவிட்டு
அடங்கவில்லை நான் எனக்கூறுவது சரியா?

எனவே...
அடிபணிவோம் அவசிய கட்டளைகளுக்கு...
அடித்து விரட்டுவோம் கரோனாவை! - என
முடிவெடுங்கள் ...முடித்துவையுங்கள் கரோனாவின் விபரீத விளையாட்டை...

என கொரோனா குறித்தும் மக்களின் விழிப்புணர்வு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com