தெலங்கானா: துணிக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து... 5 கடைகள் முற்றிலும் எரிந்து சேதம்

தெலங்கானா: துணிக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து... 5 கடைகள் முற்றிலும் எரிந்து சேதம்
தெலங்கானா: துணிக் கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து... 5 கடைகள் முற்றிலும் எரிந்து சேதம்

ஹைதராபாத்தில் துணிக்கடைகளில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 5 கடைகள் தீயில் எரிந்து சேதமடைந்தன.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள துணிக்கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கோட்டி சென்டர் என்ற துணிக்கடைகள் உள்ள பகுதியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டதின் பேரில், 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயை அணைக்க போராடினர்.


இதில் 5 துணிக்கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன. 6 மணி நேரம் போராடி தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com