சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - செல்போனில் படம்பிடித்த மனைவி

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - செல்போனில் படம்பிடித்த மனைவி
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் - செல்போனில் படம்பிடித்த மனைவி

உத்தரபிரதேசத்தில் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய இளைஞரையும், அதனை செல்போனில் படம்பிடித்த மனைவியையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் புடான் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரிஷி குமார் (27). இவருக்கு சவீதா (24) என்ற பெண்ணுடன் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு ரிஷி குமார் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இதற்கு சிறுமி பல முறை எதிர்ப்பு தெரிவித்தும் ரிஷி குமார் அவருக்கு தொல்லை தருவதை விடவில்லை.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி அதிகாலை அந்த சிறுமியை ரிஷிகுமார் தனது வீட்டுக்கு பலவந்தமாக இழுத்து வந்துள்ளார். பின்னர் அவரை பாலியல் வன்கொடுமை செய்தார். இதனை ரிஷி குமாரின் மனைவி சவீதா செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.

இங்கு நடந்ததை வெளியே கூறினால் வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக ரிஷிகுமாரும், சவீதாவும் சிறுமியை மிரட்டியுள்ளார். இதற்கு பயந்து சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே கூறாமல் இருந்துள்ளார். இதனிடையே, சிறுமியின் செயல்பாடுகளில் மாற்றத்தை உணர்ந்த அவரது பெற்றோர் இதுகுறித்து விசாரித்துள்ளனர். அப்போது நடந்த விஷயத்தை தனது பெற்றோரிடம் அந்த சிறுமி கூறவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதன்பேரில் ரிஷிகுமாரையும், மனைவி சவீதாவையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com