குர்கானில் இருந்து 15 வயது இளம் பெண் ஒருவர் தனது தந்தையுடன் 1,200 கி.மீட்டர் சைக்கிளிலேயே பயணித்துள்ளார்.
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 வயது நிறைவர் ஜோதி குமாரி. கடந்த மார்ச் மாதம், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பெண் தனது தந்தை மோகன் பாஸ்வானைப் பார்க்க குர்கானுக்குச் சென்றிருந்தார். இங்குதான் இவரது தந்தை ரிக்ஷா தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மகள் குர்கான் போன தருணம் பார்த்து கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்குப் போடப்பட்டது. ஆகவே ஜோதி தனது தந்தையுடன் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எந்த வேலையும் இல்லாமல் கையில் பணமும் இல்லாமல் இருந்ததுள்ளது. அதனால் தந்தையும் மகளும் பட்டினியால் தவித்துள்ளனர். இதனிடையே வீட்டு உரிமையாளர் இவர்களை வெளியேற்றப் போவதாக அச்சுறுத்தி உள்ளார்.