திருமணத்திற்கு சில மணிநேரம் முன் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்!

திருமணத்திற்கு சில மணிநேரம் முன் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்!
திருமணத்திற்கு சில மணிநேரம் முன் தற்கொலை செய்த சாப்ட்வேர் என்ஜினீயர்!

திருமணம் நடப்பதற்கு 4 மணி நேரத்திற்கு முன், சாப்ட்வேர் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஐதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியைச் சேர்ந்தவர் சந்தீப் (24). சாப்ட்வேர் என்ஜீயர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவருக்கும் இவரது உறவினர் பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்தது. நேற்று காலை 11 மணிக்குத் திருமணம் நடக்க இருந்தது. 

ஐதராபாத் புறநகர் பகுதியான கொம்பள்ளியில் உள்ள திருமண மண்டபத்தில் இதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. சனிக்கிழமை இரவு வரை ஜாலியாக இருந்த சந்தீப், நேற்று அதிகாலை 3 மணிக்கு மணமகன் அறைக்குத் தூங்கச் சென்றார். காலை 7 மணிக்கு, அவர் துங்கிக்கொண்டிருந்த அறையின் கதவைத் தட்டினர். திறக்கவில்லை. இரவு அதிக நேரம் முழித்ததால் தூங்கிக்கொண்டிருப்பதாக உறவினர்கள் நினைத்தனர். 

இந்நிலையில் சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் கதவைத் தட்டினர். திறக்கவில்லை. சத்தமும் வராததால் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து கதவை உடைத்துப் பார்த்தபோது சந்தீப், ஃபேனில் தூக்குமாட்டி இறந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அலறிய உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சந்தீப் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எதற்காக சந்தீப் தற்கொலை செய்துகொண்டார் என்பது பற்றி விசாரணை நடத்தினர். சந்தீப்பின் அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அப்பா பிசினஸ்மேன். இதனால் தாத்தா வீட்டில் வளர்ந்து வந்தார் சந்தீப். இவரது தாத்தா சில மாதங்களுக்கு முன்  இறந்துவிட்டார். தாத்தா மீது அதிக பாசம் வைத்திருந்த சந்தீப், அதில் இருந்தே சோகமாக இருந்துள்ளார். அந்தப் பிரிவை தாங்காமல் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். 

திருமணம் நடக்க இருந்த சில மணி நேரத்திற்கு முன்பு, மணமகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com