ஒடிசா மாநிலத்தில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் ஒருவரை கிராம மக்கள் கடுமையாகத் தாக்கினர்.
பாரிபடா கிராமத்தில் ஆசிரியர் ஒருவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த கிராம மக்கள், ஆசிரியரைத் தெருவுக்கு இழுத்து வந்து சரமாரியாகத் தாக்கினர். செருப்பால் அடித்தும், திட்டியும் மக்கள் தங்களின் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். செல்போனில் பதிவான இந்தக் காட்சி தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.