அடப்பாவி: நடிகையை பெட்ரூமுக்குள் தள்ளிய ஆசிரியர்!
நடிகையை பெட்ரூமுக்குள் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நடிப்பு ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை அருகிலுள்ள ஒஷிவாரா பகுதியை சேர்ந்தவர் 30 வயது இளம் பெண் ஒருவர். நாடகங்களில் நடித்து வந்த இவருக்கு நடிப்பு ஆசை அதிகரிக்க, லோகண்ட்வாலா பகுதியில் நடிப்புப் பயிற்சி பள்ளி நடத்தும் அனுஷ்மன் சிங் என்பவரிடம் சேர்ந்தார். கடந்த சில மாதங்களாக அங்கு நடிப்புப் பயின்று வந்தார். அந்த இளம்பெண் மீது அனுஷ்மன் சிங்கிற்கு ஆசை வந்தது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருந்தார். நேற்று அவருக்கு போன் செய்த சிங், ’நான் சில நாட்கள் ஊரில் இருக்க மாட்டேன். இன்று என் வீட்டில் பயிற்சியை வைத்துக்கொள்ளலாம்’ என்றார். இதை உண்மை என்று நம்பி சென்ற அந்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதலில் அவரைத் தொட்டுப்பேசிய நடிப்பு ஆசிரியர், அவரை பெட்ரூமுக்குள் தள்ளினார். இதை எதிர்பார்க்காத அந்தப் பெண், கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். அதைக் கண்டுகொள்ளாத சிங், தொடர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முன்றார். இதையடுத்து அவரைத் தள்ளிவிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த அந்தப் பெண், ஒஷிவாரா போலீசில் புகார் செய்தார். போலீசார் சிங்கை கைது செய்தனர்.
நடிப்பு ஆசிரியர் இப்படி அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.