'சபரிமலை தந்திரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' தேவஸம் போர்டு தலைவர்

'சபரிமலை தந்திரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' தேவஸம் போர்டு தலைவர்
'சபரிமலை தந்திரி 15 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும்' தேவஸம் போர்டு தலைவர்

பெண்கள் நுழைந்ததற்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடையை அடைத்தது தொடர்பாக தந்திரி 15 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என்று தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலப் பூஜை நிறைவடைந்து மகர பூஜைக்காக நடை டிசம்பர் 30-ஆம் தேதி மாலை திறக்கப்பட்டது. வரும் ஜனவரி 14-ம் தேதி வரை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் சபரிமலைக்கு வந்த இரண்டு பெண்கள் சில நாள்களுக்கு முன்பு அதிகாலையில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ததால், கோயில் நடை அடைக்கப்பட்டது. சன்னிதானத்தின் நடை திடீரென அடைக்கப்பட்டு, பெண்கள் தரிசனம் செய்ததால் தந்திரியின் பரிகார பூஜை செய்தார். இது குறித்து பலத்த சர்ச்சை எழுந்தது. 

இது குறித்து பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன் " சபரிமலை தந்திரியின் நடவடிக்கை வினோதமாக இருக்கிறது. தந்திரியும், தேவஸம் போர்டு ஆகியோரின் வாதங்களை கேட்ட பின்புதான் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்பு குறித்து எதிர்மறையான கருத்துகளை தெரிவிக்க தந்திரிக்கு அனைத்து உரிமையும் இருக்கிறது. ஆனால் நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றுவது அதனை மதிப்பது தந்திரியின் கடமை. அப்படி அவரால் முடியாதென்றால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டும். அவருக்கு வேறு வழியில்லை. மேலும் தேவஸம் போர்டு இது குறித்து ஆராய்ந்து தந்திரியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தேவஸம் போர்டு தலைவர் பத்மகுமார் "சபரிமலை கோயில் நடை அடைப்பு குறித்து 15 நாள்களில் விளக்கம் தருமாறு தந்திரி கண்டரூ ராஜீவருவிடம் ஏற்கெனவே தெரிவித்துவிட்டோம். மேலும் பெண்கள் நுழைந்ததற்காக தந்திரி பரிகார பூஜை செய்தது அபத்தம். அவர் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக் கட்ட முடிவுகள் எடுக்கப்படும்" என்றார் அவர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com