பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நாகலாந்து! மற்ற மாநிலங்கள் மீதும் எகிறும் எதிர்பார்ப்பு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நாகலாந்து! மற்ற மாநிலங்கள் மீதும் எகிறும் எதிர்பார்ப்பு

பெட்ரோல், டீசல் விலையை குறைத்த நாகலாந்து! மற்ற மாநிலங்கள் மீதும் எகிறும் எதிர்பார்ப்பு
Published on

நாகலாந்து மாநிலம் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்ததால் அம்மாநிலத்தில் விலை குறைந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து உயர்த்தி வந்தன. தொடர்ந்து 12 நாட்களாக விலை உயர்ந்ததால், ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் பெட்ரோல் லிட்டர் ரூ.100 ஐ கடந்தவாரமே கடந்துவிட்டது. பல்வேறு மாநிலங்களிலும் பெட்ரோல் லிட்டர் ரூ.92 ரூபாய்க்கும் மேல் அதிகரித்தது. டீசல் விலையும் லிட்டர் ரூ.86க்கு மேல் உயர்ந்துவிட்டது.

இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்தன. மேகாலயா அரசு கடந்த வாரம், பெட்ரோல், டீசல் மீது தலா ரூ.5 குறைக்க முதல்வர் காம்ராட் சங்மா உத்தரவிட்டார்.

அதற்கு முன்னதாக, கடந்த 12 ஆம் தேதி அசாம் மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.5 குறைத்து அறிவித்தன. இதனால் இரு மாநிலங்களிலும் பெட்ரோல், டீசல் விலை குறைந்தது. இந்நிலையில், நாகாலாந்து அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து நேற்று இரவு அறிவித்துள்ளது.

இதன்படி, பெட்ரோல் மீதான வரி ரூ.29.80 சதவீதத்திலிருந்து 25 ஆகவும், டீசல் மீதான வரி 17.50 சதவீதத்தில் இருந்து 16.50 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2.22 வரையிலும், டீசல் விலை லிட்டருக்கு 57 பைசா வரையிலும் குறையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் விலைக்குறைப்பு செய்துள்ள நிலையில், மற்ற மாநிலங்களிலும் விலைக்குறைப்பு குறித்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com