ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஏர் இ்ந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் தொகைகளை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அஜய் சிங் தனது நிறுவனம் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.