குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை வாங்குகிறது டாடா மோட்டார்ஸ்

குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை வாங்குகிறது டாடா மோட்டார்ஸ்
குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை  வாங்குகிறது டாடா மோட்டார்ஸ்

குஜராத்தில் உள்ள ஃபோர்டு சனந்த் தொழிற்சாலையை டாடா மோட்டார்ஸ் வாங்குவது உறுதியாகியுள்ளது. இதற்கான ஒப்பந்தம்
நாளை கையெழுத்தாகவுள்ளது.

அமெரிக்காவின் முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு (FORD)நிறுவனம், இந்தியாவில் உள்ள சென்னை, குஜராத் தொழிற்சாலையை மூடிவிட்டு
வெளியேறப் போவதாக கடந்த ஆண்டு அறிவித்தது. இதையடுத்து, குஜராத்தில் உள்ள ஃபோர்டு நிறுவனத்தை வாங்க, இந்தியாவின் மிகப்பெரிய
ஆட்டோ மொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் முயற்சிகளை மேற்கொண்டது.

இந்நிலையில், இரு நிறுவனங்களும் இதுதொடர்பாக ஒப்பந்தம் செய்து கொள்ள குஜராத் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் முன்னிலையில் டாடா, ஃபோர் நிறுவனங்கள் நாளை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com