”நாங்கள் எடுத்துச் சென்ற மருந்துகள் போதவில்லை” - மணிப்பூருக்கு சென்ற சென்னை மருத்துவர் பகீர் தகவல்!

"மணிப்பூரில், மனநலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாங்கள் எடுத்துச்சென்ற மருந்துகள் போதவில்லை" என மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் கூறினார்.

மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனநல சிகிச்சை வழங்குவதற்காகத் தன்னார்வத்துடன் சென்றவர் மருத்துவர் ராதிகா முருகேசன். சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த இவர், தற்போது அம்மாநில மக்களுக்குத்தேவையான மருந்துகளுக்கு நிதி திரட்டிவருகிறார்.

இதுகுறித்து அவர், ”அங்குள்ள மக்களுக்கிருக்கும் மனநலப் பிரச்னைகளுக்கு நாங்கள் எடுத்துச்சென்ற மருந்துகள் போதவில்லை” என்று கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com