ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு...தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு...தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்
ஆ.ராசாவுக்கு எதிராக புதுச்சேரியில் முழு அடைப்பு...தமிழக பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் தமிழக அரசுப் பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்து மக்களை இழிவாக பேசியதாக திமுக எம்.பி ராசாவை கண்டித்தும், தமிழக அரசு ராசாவை கைது செய்ய வலியுறுத்தியும் இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் புதுச்சேரியில் இன்று ஒரு நாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

அதன்படி இன்று விடியற்காலை முதல் நகரில் உள்ள அனைத்து டீக்கடை முதல் பெரிய கடைகள் என எதுவும் திறக்கப்படவில்லை. தனியார் பேருந்துகள், டெம்போக்கள் இயங்கவில்லை. இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பெரிய மார்க்கெட் உட்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் அனைத்து அங்காடிகளும் மூடப்பட்டுள்ளன.

மிகக்குறைந்த அளவில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுப் பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றது. அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கும் வகையில் நகர் முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், வில்லியனூர் பகுதியில் இரண்டு தமிழக அரசுப் பேருந்துகள் மீது சிலர் கல் வீசி தாக்கியிருக்கிறார்கள். இதில் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்தன. இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com