விரைவுச் செய்திகள்: ஆக்சிஜன் ஒதுக்கீடு | குத்தகைக்கு தடுப்பூசி உற்பத்தி மையம்| யாஸ் புயல்

விரைவுச் செய்திகள்: ஆக்சிஜன் ஒதுக்கீடு | குத்தகைக்கு தடுப்பூசி உற்பத்தி மையம்| யாஸ் புயல்
விரைவுச் செய்திகள்: ஆக்சிஜன் ஒதுக்கீடு | குத்தகைக்கு தடுப்பூசி உற்பத்தி மையம்| யாஸ் புயல்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

குறைகிறது கொரோனாவின் தாக்கம்: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் விகிதம் கணிசமாக குறைந்து வருகிறது. 24 மாநிலங்களில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

தடுப்பூசி போட திரண்ட இளைஞர்கள்: சேலம், மதுரையில் தடுப்பூசி போட ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் திரண்டனர். அங்கு தனிமனித இடைவெளி பின்பற்றப்படாததால் தொற்று பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தடுப்பூசி போடுவது அதிகரிப்பு: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடுவது அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 2 லட்சத்து 64 ஆயிரம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி தயாரிப்பு மையத்தை குத்தகைக்கு தாருங்கள்: செங்கல்பட்டு தடுப்பூசி தயாரிப்பு மையத்தை தமிழகத்திற்கு , மத்திய அரசு குத்தகைக்கு விட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி மையம் - ஒரு வாரத்தில் முடிவு: செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் டி. ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஃபைசர் தடுப்பூசி குறித்து பரிசீலனை: இந்தியாவில் ஃபைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கருப்பு பூஞ்சை - ஆம்போடெரிசின் மருந்து ரூ.1200: கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின் மருந்தின் விலை 1,200 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வர்தா நிறுவனம் தயாரிக்கும் மருந்து திங்கள்கிழமை முதல் விற்பனைக்கு வருகிறது.

மேற்கு வங்கம் செல்கிறார் மோடி: யாஸ் புயல் பாதிப்புகளை பிரதமர் மோடி நாளை ஆய்வு செய்கிறார். ஒடிசா, மேற்குவங்கத்தில் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிடுகிறார்.

குடியிருப்புப் பகுதிகள், சாலைகள் நீரில் மூழ்கின: கன்னியாகுமரியில் மூன்றாவது நாளாக கனமழை கொட்டித் தீர்க்கிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாய் காட்சியளிப்பதுடன், சாலைகளும் நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

திற்பரப்பு அருவியை மூழ்கடித்த வெள்ளம்: தொடர் மழையால் திற்பரப்பு நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கோதையாறு, தாமிரபரணியிலும் வெள்ளநீர் பாய்ந்தோடுகிறது.

பருப்பு டெண்டருக்கு தடை - அரசு மேல்முறையீடு: பருப்பு, பாமாயில் கொள்முதல் டெண்டருக்கு உயர்நீதிமன்ற கிளை தடைவிதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. மனுவாக தாக்கல் செய்தபிறகு விசாரணை நடத்துவதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் - ட்விட்டர்: இந்தியாவில் தங்கள் சேவையை பயன்படுத்தும் மக்களின் பேச்சு சுதந்திரத்திற்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் கவலை தெரிவித்துள்ளது. காங்கிரஸ் ’டூல்கிட்’ விவகாரத்தில் ட்விட்டர் நிறுவன அலுவலகத்திற்கு சென்று டெல்லி காவல்துறையினர் நோட்டீஸ் அளித்திருந்த நிலையில் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com