பொது மக்கள் குறைகளை கேட்கிறார் ஆளுநர் தமிழிசை?

பொது மக்கள் குறைகளை கேட்கிறார் ஆளுநர் தமிழிசை?
பொது மக்கள் குறைகளை கேட்கிறார் ஆளுநர் தமிழிசை?

தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிரஜா தர்பார் என்ற பெயரில் பொது மக்களின் குறைகளை கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இது அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள தெலங்கானாவை ஆளும் கட்சியான டிஆர்எஸ் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. 

ஆளுநர் பொது மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்க சட்டத்தில் விதிமுறைகள் இருக்கும் பட்சத்தில் அதை தாங்கள் எதிர்க்க மாட்டோம் என அக்கட்சியின் மேலவை கொறடா பல்லா ராஜேஸ்வர ரெட்டி கூறியுள்ளார். முன்னதாக தெலங்கானாவில் ஆளுநர் வாரம் ஒரு முறை பொது மக்களை சந்தித்து அவர்கள் குறைகளை கேட்கலாம் என அம்மாநில கட்சி ஒன்றின் செயதித் தொடர்பாளர் கூறியிருந்தார். இது போன்ற திட்டம் தன் பரிசீலனையில் உள்ளதாக தமிழிசை தன் டுவிட்டர் பதிவில் கூறியிருந்தார். புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகார வரம்பு குறித்து ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் கடும் கருத்து வேறுபாடுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com