திருப்பதி திருமலைக்கு பாத யாத்திரையாக மலையேறிச் சென்ற அண்ணாமலை!

திருப்பதி திருமலைக்கு பாத யாத்திரையாக மலையேறிச் சென்ற அண்ணாமலை!
திருப்பதி திருமலைக்கு பாத யாத்திரையாக மலையேறிச் சென்ற அண்ணாமலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்வதற்காக நேற்றிரவு திருப்பதிக்கு வந்தார். இதையடுதது திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலையேறிச் சென்ற அவர் இரவு திருப்பதி மலையில் தங்கினார். இந்த நிலையில் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற அண்ணாமலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். இதையடுத்து கோவிலில் இருந்து வெளியே வந்த அண்ணாமலையை தமிழக பக்தர்கள் சூழ்ந்து கொண்டு அவருடன் போட்டி போட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்களும் அண்ணாமலையுடன் கைகுலுக்கி பேசி செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், “தமிழக மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ அருள்புரிய வேண்டும் என்று வேண்டி கொண்டேன். அடுத்த பாராளுமன்ற தேர்தலில் குறிப்பிட தக்க எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தமிழக பாஜக டெல்லிக்கு அனுப்பி வைக்கும்” என்றும் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com