ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு காஷ்மீரில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம்
Published on

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த இரண்டு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிப்பாய் இளையராஜா என்பவர் உயிரிழந்தார். உயிரிழந்த மற்றொருவர் சிப்பாய் காவாய் வாமன். சோபியானில் நேற்று முதல் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள அவ்நீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், ஒரு தீவிரவாதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தீவிர தேடுதல் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com