தமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

தமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு
தமிழர்களின் படகுகள் விடுவிக்கப்படும் - மோடி சந்திப்புக்கு பின் கோட்டாபய ராஜபக்ச அறிவிப்பு

இலங்கை வசமுள்ள தமிழர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும் என இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கோட்டாபய ராஜபக்சவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும், பிரதமர் நரேந்திர மோடியும் நேரில் வரவேற்றனர். அப்போது செய்தியா‌ளர்களிடம் பேசிய கோட்டாபய ராஜபக்ச, தன்னுடைய சுற்றுப்பயணத்தை குறித்த எதிர்பார்ப்பு மிகப் பெரியது எனக் கூறினார்.

இதைத்தொடர்ந்து டெல்லியில் பிரதமர் மோடியுடன் அவர் ஆலோசனை நடத்தினர். சந்திப்பிற்கு பின்னர், “தமிழர்கள் உட்பட அனைத்து இந்திய மீனவர்களின் படகுகளும் விடுவிக்கப்படும்” என்று அவர் அறிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com