மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சருடனான சந்திப்பின் போது வலியுறுத்தியதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்ற தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து மீனவர்கள் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர். சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பின்போது, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அமைச்சர் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதால் நமது கடல் எல்லை சுருங்கி விட்டதாக குறிப்பிட்டார். இனி எந்தச் சூழலில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு நடைபெறக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமைச்சர் சுஷ்மா சுவராஜிடம் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.