புத்தர் மடியில் அமர்ந்த தஹிரா காஷ்யப் - வலுக்கும் எதிர்ப்பு

புத்தர் மடியில் அமர்ந்த தஹிரா காஷ்யப் - வலுக்கும் எதிர்ப்பு
புத்தர் மடியில் அமர்ந்த தஹிரா காஷ்யப் - வலுக்கும் எதிர்ப்பு

சமூக வலைத்தளங்களில் தஹிரா காஷ்யப் பதிவிட்ட நிழற்படம் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


பிரபல எழுத்தாளர் மற்றும் நடிகர் ஆயுஸ்மான் குரானாவின் மனைவி தஹிரா காஷ்யப். இவர் கடந்த வருடம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனினும் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்தார். இதனையடுத்து இவர்தான் கடந்த புற்றுநோய் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். 

இந்நிலையில் சில நாட்களுக்கு முன் அவர் தனது நண்பருடன் சுற்றுலா சென்றுள்ளார். அந்தச் சுற்றுலாவில் எடுத்த படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டார். இந்தப் படங்களில் இவர் புத்தர் மடியில் அமர்ந்திருப்பது போல் ஒரு படம் இருந்தது. இந்தப் படம் அவருக்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படத்திற்கு சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இதுதொடர்பாக ஒருவர், “புத்தாவின் மடியில் அமர்ந்து படம் எடுத்தது மிகவும் தவறு. இவரை போன்ற படித்தவர்களே இப்படி செய்தால் படிக்காதவர்கள் என்ன செய்வார்கள். கடவுளுக்கு மரியாதை கொடுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார். 

மற்றொரு நபர், “ஒரு மத தலைவரின் மடி மீது அமர்ந்து படம் எடுப்பது உங்களை போன்றவர்களுக்கு உகந்ததா? இவரை விவேகமான பெண் எனக் கூறிய அனைவருக்கும் ஒரு நிமிடம் அமைதியை காணிக்கையாக்குகிறேன்” என்று பதிவிட்டார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com