’எங்கள் ஒப்புதலுடன் வரியா?; ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்து இதுதான்’ - பழனிவேல் தியாகராஜன்

’எங்கள் ஒப்புதலுடன் வரியா?; ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்து இதுதான்’ - பழனிவேல் தியாகராஜன்

’எங்கள் ஒப்புதலுடன் வரியா?; ஜிஎஸ்டி கூட்டத்தில் நடந்து இதுதான்’ - பழனிவேல் தியாகராஜன்

உணவுப் பொருட்கள் மீதான 5 விழுக்காடு ஜிஎஸ்டி வரி தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களின் ஒப்புதலுடன் உயர்த்தப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதில் முழு உண்மையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “சண்டிகரில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெற்றபோது, 56 பொருட்களுக்கு வரி தொடர்பாக பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. அந்த 56 பொருட்களுக்கான பரிந்துரைகளையும் ஒரே வாக்கில் ஆம் அல்லது இல்லை என்று தேர்வு செய்ய வேண்டும். அந்த சூழலில் 56 பொருட்களையும் கலந்துரையாடி தேர்ந்தெடுப்பதற்கு போதிய நேரமில்லை. மேலும், ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக கலந்துரையாடி தேர்வு செய்வதற்கான வழிவகையும் கொடுக்கவில்லை. ஆகையால் மொத்தமாக 56 பொருட்களுக்கும் ஒன்றாக சேர்த்து ஒப்புதல் அளித்தோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com