விமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ?

விமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ?

விமான நிலையத்தில் கிடந்த பையில் ஆர்டிஎக்ஸ் வெடி மருந்து ?
Published on

டெல்லி விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் கண்டெடுக்கப்பட்ட பையில் வெடிமருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. 

இந்திரா காந்தி  சர்வதேச விமான நிலையத்தில், பை ஒன்று கேட்பாரற்று கிடப்பதாக காவல் துறையினருக்கு அதிகாலையில் தகவல் கிடைத்தது. இதனையடுத்து விமான நிலைய காவல் துறையினர் அந்தப் பையை அங்கிருந்து அப்பு‌றப்படுத்தி, மோப்ப நாய் உதவியுடன், அதனை சோதனைக்கு உட்படுத்தினர். 

இதனால் விமான நிலையத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அப்போது விமான நிலையத்திலிருந்து பயணிகள் யாரும் வெளியேற அனுமதிக்கப்படவில்லை. பரிசோதனைக்குப் பின்னர் அந்தப் பையில் வெடிமருந்துகள் இருப்ப‌து கண்டறியப்பட்டது. அது சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்தாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனாலும், அந்த வெடி மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், 24 மணி நேரத்திற்குப் பின்னரே உறுதியாகக் கூற முடியும் என்று டெல்லி விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com