சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல; தற்கொலையே - எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்

சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல; தற்கொலையே - எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்
சுஷாந்த் சிங் மரணம் கொலை அல்ல; தற்கொலையே - எய்ம்ஸ் மருத்துவர் விளக்கம்

நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் கொலை அல்ல தற்கொலை தான் என்று எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா தெரிவித்துள்ளார்.

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் கொலையா? தற்கொலையா? என்று எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு பிரேத பரிசோதனை அறிக்கையை கொண்டு ஆய்வு செய்து வந்தது.

எய்ம்ஸ் மருத்துவர்கள் தங்கள் ஆய்வை செப்டம்பர் 29ஆம் தேதி மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு சமர்ப்பித்தனர். எய்ம்ஸ் மருத்துவக்குழுவின் அறிக்கை கூப்பர் மருத்துவமனையின் அறிக்கையுடன் ஒத்துப்போகின.

சுஷாந்தின் குடும்ப வழக்கறிஞர் விகாஷ்சிங், சுஷாந்த் கொலை செய்யப்பட்டதுக்கான சாத்திய கூறுகள் 200 சதவீதம் உறுதியாகியுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த எய்ம்ஸ் மருத்துவர் சுதிர் குப்தா, இது 200 சதவீதம் தற்கொலைக்கான சாத்தியக்கூறே உள்ளது. இன்னும் விசாரணை முடியவில்லை. அது முடிந்த பின்பே இதற்கான முழு விவரங்களும் தெரியவரும் என்று குறிப்பிட்டார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத் ஜூன் 14 அன்று அவரது பாந்த்ரா வீட்டில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில் தூக்குப்போட்டுக் கொண்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com