‘திக்... திக்... நொடி....’ - ஒடிசா ரயில் விபத்தில் தப்பி பிழைத்த பயணியின் உருக்கமான பதிவு! #Video

“என் கண்முன்னே பலர் துடிக்கதுடிக்க இறந்துட்டாங்க. பலர் சகதியில் மூழ்கி இறந்ததையும் பார்த்தேன். நான் ஜன்னல் பக்கம் அமர்ந்திருந்ததால் அதன் வழியாக தப்பித்து வெளியே வந்தேன்”- தப்பிப்பிழைத்தவர்

கடந்த வெள்ளியன்று ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தை அடுத்த பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே 3 ரயில்கள் விபத்துக்குள்ளானது. அந்த 3 ரயில்களாக கொல்கத்தாவிலிருந்து சென்னை வந்து கொண்டிருந்த ஷாலிமர் - சென்னை செண்ட்ரல் கோரமண்டல் விரைவு ரயில்; ஒரு சரக்கு ரயில்; யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் ரயில் ஆகியவை இருந்தன.

Odisha Tragedy
Odisha TragedyPTI

இந்த மூன்று ரயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தப்பி பிழைத்த பயணி ஒருவர், ரயில் எப்படி விபத்துக்குள்ளானது என்றும், அதில் தான் தப்பி பிழைத்தது எப்படி என்றும், தன்னுடன் பயணித்த பயணிகளுக்கு என்ன ஆனது என்றும் புதிய தலைமுறையில் பேசியுள்ளார்.

அதை இக்கட்டுரையில் மேல் இணைகப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com