\
மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை: தனி நபர் மசோதா தாக்கல்

மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை: தனி நபர் மசோதா தாக்கல்

மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை: தனி நபர் மசோதா தாக்கல்
Published on

அரசு மருத்துவமனைகளில் மார்பக புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிப்பது தொடர்பான தனி நபர் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி உறுப்பினரும் சரத் பவாரின் மகளுமான சுப்ரியா சுலே, இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளார். மார்பக புற்றுநோய்க்கு சிகிச்சை மட்டுமல்லாமல் அதை கண்டறியும் சோதனைகளையும் இலவசமாக வழங்க வேண்டும் என்றும் அம்மசோதாவில் சுப்ரியா சுலே கேட்டுக்கொண்டுள்ளார். 

மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் இம்மசோதாவை சுப்ரியா சுலே கொண்டுவந்துள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com