சுஷாந்த் மரண வழக்கு: ரியா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !

சுஷாந்த் மரண வழக்கு: ரியா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !
சுஷாந்த் மரண வழக்கு: ரியா மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு !

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் உயிரிழந்தது தொடர்பாக தன் மீதான விசாரணையை மும்பைக்கு மாற்றக்கோரி காதலி ரியா சக்ரபோர்த்தி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து, அவரது தற்கொலை தொடர்பான வழக்கை போலீஸ் விசாரித்து வருகிறது. இதேபோல், சுஷாந்த் சிங்கின் தந்தை அளித்த புகாரின்பேரில், அவரது காதலியான ரியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி ரியா, அவரது தந்தை இந்திரஜித், சகோதரர் சோவிக், அவரது மேலாளர் சாமுவேல் மிரான்டா, ஸ்ருதி மோடி ஆகிய 6 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், நம்பிக்கை மோசடி, திருட்டு ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் சுஷாந்த் தற்கொலையில் நடிகை ரியாவுக்கு எதிரான வழக்கில் விசாரணைக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், தற்கொலைக்கு தூண்டியதாக பீகாரில் நடைபெற்று வரும் விசாரணைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு ரியா மீதான குற்றச்சாட்டு கடுமையானது எனவும் தெரிவித்துள்ளது.

ரியா தரப்பில் பாட்னாவில் நடைபெறும் விசாரணையை மும்பைக்கு மாற்றப்பட வேண்டும் என மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்சநீதிமன்றம் அது தொடர்பான தீர்ப்பை இன்று வழங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com