நீதிபதி கர்ணன் மனநிலை: உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு

நீதிபதி கர்ணன் மனநிலை: உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு

நீதிபதி கர்ணன் மனநிலை: உச்சநீதிமன்றம் திடீர் உத்தரவு
Published on

நீதிபதி கர்ணனின் மனநிலை குறித்து பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். இவர் நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார்களை கூறினார். இதையடுத்து உச்ச நீதிமன்றம் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து, ஆஜராக உத்தரவிட்டது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராக மறுத்து விட்டார். அவருக்கு எதிராக வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. பிறகு நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகள் கடந்த 28-ம் தேதி தன் முன் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். பிறகு அவர் கடந்த சில நாட்களுக்கு முன் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், தன் முன் ஆஜராகாததால் அவர்கள் மீண்டும் 1-ம் தேதி ஆஜராக வேண்டும். அத்துடன் தலைமை நீதிபதி உள்பட 8 நீதிபதிகளும் வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கர்ணனின் மனநிலை குறித்து மே 5 ஆம் தேதி மருத்துவப் பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com