இந்தியா
"புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
"புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரமில்லை" - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வேதனை
இந்தியாவில் புகார் அளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லை என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா வேதனை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் புகாரளிக்க நீதிபதிகளுக்கு சுதந்திரம் இல்லாத நிலை உருவாகியுள்ளது துரதிர்ஷடவசமானது என்றும் அவர் கூறியிருக்கிறார். போலீஸ் அல்லது சிபிஐயிடம் நீதிபதிகள் புகாரளித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார். புலனாய்வு அமைப்புகள் நீதித்துறைக்கு உறுதுணையாக இல்லை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார்.
ஜார்க்கண்ட்டில் மாவட்ட நீதிபதி உத்தம் ஆனந்த் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி இந்த கருத்தினை முன்வைத்திருக்கிறார்.