மேற்கு வங்க மாநிலத்தில் காளி பூஜை, தீபாவளி, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு அனைத்து பண்டிகைகளின் போது பட்டாசுகள் விற்பதையும் வெடிப்பதையும் தடுக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக கௌதம் ராய் என்பவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வில் விசாரணை நடைபெற்றது.