"செல்போன் கதிர்வீச்சை நாங்கள் எப்படி தடுத்து நிறுத்த முடியும்?" - உச்சநீதிமன்றம் கேள்வி

"செல்போன் கதிர்வீச்சை நாங்கள் எப்படி தடுத்து நிறுத்த முடியும்?" - உச்சநீதிமன்றம் கேள்வி
"செல்போன் கதிர்வீச்சை நாங்கள் எப்படி தடுத்து நிறுத்த முடியும்?" - உச்சநீதிமன்றம் கேள்வி

மின்னணு சாதனங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்களை கட்டுப்படுத்த கோரி தொடரப்பட்ட பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு, “நீதிமன்றம் இந்த விவகாரத்தில் எந்த வகையில் தலையிட்டு நிறுத்த முடியும் என நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினர். மேலும் “உங்களிடம் அலைபேசி இருக்கிறது. அதிலிருந்து கூடதான் கதிர்வீச்சுக்கள் வெளியாகிறது. அதற்காக நீதிமன்றத்தை நாடுவீர்களா?” என கேள்வி எழுப்பினர்.

“இது சம்பந்தமாக கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலமாக பிரச்சனை பெரிதாகாமல் இருக்கும். செயற்கைக்கோள்கள் கூட கதிர்வீச்சுக்களை வெளியிடுகிறது. இவை எல்லாம் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும்.” என மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வைத்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், “இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் சென்று முறையிடுங்கள்” எனக் கூறியதோடு “இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வாயிலாக நடைமுறைப்படுத்தக் கூடிய எதுவும் சாத்தியம் இல்லை” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com