துணைநிலை ஆளுநர் அதிகாரம்: கிரண்பேடி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

துணைநிலை ஆளுநர் அதிகாரம்: கிரண்பேடி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
துணைநிலை ஆளுநர் அதிகாரம்: கிரண்பேடி மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

 அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தலையிடுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், துணை நிலை ஆளுநருக்கு, அதற்கான அதிகாரமில்லை என ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. 

இதற்கு இடைக்கால தடைவிதிக்கக் கோரி, கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, கடந்த ஜூன் 21-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதிகள், இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க மறுத்தனர். 

கடந்த ஜூன் 04-ஆம் தேதி, இந்த வழக்கில் புதுச்சேரி அரசு கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என்றும் அதே நேரம் நிதி சார்ந்த முடிவுகளை அமல்படுத்தக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று வந்தது.  மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிமன்றம், அவர் மனுவை தள்ளுபடி செய்தது. அதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com