"நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள்.." பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்று பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பஞ்சாப்பில் அரசு மற்றும் ஆளுநரின் செயல்பாடு கவலை அளிக்கிறது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீங்கள் நெருப்புடன் விளையாடுகிறீர்கள் என்று பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது. பஞ்சாப் அரசும் ஆளுநரும் அரசியல் சாசனத்தை சீர்குலைக்கும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருப்பதாகவும் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். மாநில அரசு அனுப்பிய மசோதாக்களை ஆளுநர் எப்படி கிடப்பில் போட முடியும் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com