'கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகார்

'கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகார்
'கோவாக்சினுக்கு அங்கீகாரம் கிடைப்பதை தடுக்க முயற்சி' - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி புகார்
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுக்க சில பன்னாட்டு மருந்து நிறுவனங்கள் முயற்சி செய்ததாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா குற்றம்சாட்டியுள்ளார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது இதை அவர் குறிப்பிட்டார்.
பாரத் பயோடெக் நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்ட கோவாக்சின், கொரோனா மற்றும் அதன் புதிய திரிபுகளுக்கு எதிராக சிறப்பாக பலனளிக்க கூடியது என்று நீதிபதி ரமணா தெரிவித்தார். இந்தியா கண்டுபிடித்த தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார அமைப்பின் அங்கீகாரம் கிடைப்பதைத் தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார். கோவாக்சினுக்கு எதிராக ஃபைசர் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்களும் சில உள்நாட்டினரும் நியாயமற்ற முயற்சிகளை மேற்கொண்டதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com