கொரோனாவால் குடும்பத்தை இழக்கும் குழந்தைகளுக்கு உதவி தயார்: நடிகர் சந்தீப் கிஷன் உருக்கம்

கொரோனாவால் குடும்பத்தை இழக்கும் குழந்தைகளுக்கு உதவி தயார்: நடிகர் சந்தீப் கிஷன் உருக்கம்
கொரோனாவால் குடும்பத்தை இழக்கும் குழந்தைகளுக்கு உதவி தயார்: நடிகர் சந்தீப் கிஷன் உருக்கம்

கொரோனாவால் குடும்பங்களை இழக்கும் குழந்தைகளுக்கு உதவப்போவதாக அறிவித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன்.

கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா காரணமாக பலர் தங்கள் குடும்பங்களை இழந்து வருகின்றனர். இந்தநிலையில் அப்படி கொரோனா வைரஸ் காரணமாக குடும்பத்தை இழந்த குழந்தைகளின் உணவு மற்றும் கல்வியை கவனித்துக்கொள்வதாக தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் அறிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில், "இந்த சவாலான காலங்களில், கொரோனா காரணமாக துரதிர்ஷ்டவசமாக குடும்பங்களை இழந்த ஏதேனும் குழந்தைகளைப் பற்றி உங்களுக்குத் தெரிந்தால், தயவுசெய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள மின்னஞ்சல் ஐடிக்கு தகவல்களை அனுப்புங்கள். நானும் எனது குழுவும் எங்கள் சக்திக்கு தகுந்த அளவு, எங்களால் முடிந்த அளவு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பல குழந்தைகளின் உணவு மற்றும் கல்வி  உட்பட சில செலவுகளை ஏற்றுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக ரசிகர்கள் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொண்ட சந்தீப், "இது சோதனை காலம். இந்த நேரத்தில், முதலில் மனிதர்களாக நாம் ஒருவருக்கொருவர் நிற்க வேண்டியது மிகவும் முக்கியம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவ, உங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முயற்சிக்கவும்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

சந்தீப்பின் இந்த உதவி நடவடிக்கையை ரசிகர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர். பலர் அவருக்கு ஆதரவாக உதவி செய்வதாக பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com