பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!

பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிய மாணவர்கள்! மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
Published on

மகாராஷ்டிர மாநிலம் பெல்காம் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்கள் பந்து என நினைத்து கையெறி குண்டை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக - மகாராஷ்டிர மாநில எல்லையில் உள்ள கூடனூர் கிராமத்தில் உள்ள மராத்தி பள்ளியில் மாணவர்கள் கையெறி குண்டை வைத்து விளையாடியதைக் கண்ட அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர், கையெறி குண்டை செயலிழக்கச் செய்தனர்.

செயலிழக்கச் செய்த கையெறி குண்டில் உருது எழுத்துக்கள் இருப்பதாக தெரிவித்த காவல்துறையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர். இதற்கு முன், 2017ல், கூடனூர் கிராமத்தில் இரண்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com