குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்

குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்
குடியரசு தினத்தில் என்ன நடந்திருந்தாலும் விவசாயிகள் இயக்கத்தை நிறுத்த முடியாது: கெஜ்ரிவால்

டெல்லி டிராக்டர் பேரணி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார்.

டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “ ஜனவரி 26 ஆம் தேதி நடந்த வன்முறை துரதிர்ஷ்டவசமானது, அதற்கு உண்மையில் காரணமான எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அன்று என்ன நடந்திருந்தாலும் விவசாயிகளின் இயக்கத்தை நிறுத்த முடியாது. நாம் அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டும், ஆனால் அமைதியான முறையில்” என தெரிவித்தார்

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் முன்னெடுத்த டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இந்த வன்முறை தொடர்பாக பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com