டெல்லியில் மீண்டும் இருதரப்பினர்களிடையே பயங்கர மோதல்..!

டெல்லியில் மீண்டும் இருதரப்பினர்களிடையே பயங்கர மோதல்..!

டெல்லியில் மீண்டும் இருதரப்பினர்களிடையே பயங்கர மோதல்..!
Published on

டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்பு இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

டெல்லியில் சி.ஏ.ஏ. ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் காவலர். மற்ற 6 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரஹம்புரி மற்றும் மஜ்பூர் ஆகிய இடங்களில் இருபிரிவினர், ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர்.

இதனையடுத்து பிரஹம்புரியில் அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து பதற்றான சூழல் நிலவுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவது தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் அதிகாரிகளுடன்‌ ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்தினார். உள்துறை அமைச்சக உயரதிகாரிகளும், டெல்லி காவல்துறை அதிகாரிகளும் ஆலோசனையில் பங்கேற்றனர். இதேபோல் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் உயரதிகாரிகள் மற்றும் வன்முறை நடைபெற்ற இடங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்பு இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com