தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் - 7பேர் மருத்துவமனையில் அனுமதி

தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் - 7பேர் மருத்துவமனையில் அனுமதி
தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் - 7பேர் மருத்துவமனையில் அனுமதி

இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் காரைக்கால் மேடு கிராமத்தை சேர்ந்த தனசீலன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில், நேற்று முன்தினம் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று கோடியக்கரை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபொழுது, அங்கு நான்கு பைபர் படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 20-க்கும் மேற்பட்டோர் தனசேகரன் படகை சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் பட்டாக்கத்தி இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு மீனவர்கள் தனசீலன், மணியன், சதீஸ், மாதேஷ், ஐயப்பன், மணிபாலன், அபிலாஷ் ஆகியோரை தாக்கியதில் ஏழு பேரும் படுகாயம் அடைந்தனர்.

மேலும் பைபர் படகில் இருந்த மீன்கள், திசை காட்டும் கருவி, செல்ஃபோன்கள், வலைகள் உள்ளிட்ட பொருட்களை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். கரை திரும்பிய 7 மீனவர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திர பிரியங்கா மற்றும் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். மேலும் மீனவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர்கள் மருத்துவரிடம் கேட்டறிந்தனர். மீனவர்களுக்கு தேவையான உயர் சிகிச்சை அளிக்கவும், மருத்துவர்களுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com