காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், கூட்டணிக் கட்சி தலைவர்களுடன் சோனியா இன்று ஆலோசனை

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுடன், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங், சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதை தவிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், இடதுசாரி தலைவர்களான D.ராஜா, சீதாராம் யெச்சூரி மற்றும் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. தற்போதைய நடப்பு அரசியல் நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்து மத்திய அரசுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த நிலையில், அதுபோன்று தொடர்ச்சியாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து மத்திய அரசுக்கு எதிராக செயல்படுவது, மாநில தேர்தல்களில் கூட்டணி வியூகம் வகுப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com