‘நெகட்டிவ்’ வந்தும் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்: பொறுப்பான செயலை பாராட்டும் கிராமம்..

‘நெகட்டிவ்’ வந்தும் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்: பொறுப்பான செயலை பாராட்டும் கிராமம்..
‘நெகட்டிவ்’ வந்தும் தனிமைப்படுத்தி கொண்ட ராணுவ வீரர்: பொறுப்பான செயலை பாராட்டும் கிராமம்..

இந்திய ராணுவத்தில் இருந்து விடுப்பில் சொந்த ஊர் திரும்பிய இளைஞரின் பொறுப்பான செயலைக்கண்டு கிராம மக்கள் பாராட்டியுள்ளனர்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிபவர் பிரகாஷ் ஹைகர். இவர் விடுமுறையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த கிராமமான அந்துருக்கு கடந்த ஜூலை 3ஆம் தேதி வந்துள்ளார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் வீட்டிற்கு செல்லாத அவர் தனது விவசாய நிலத்தில் வேன் ஒன்றின் மூலம் டெண்ட் தயார் செய்து தனிமையில் தங்கியுள்ளார். அவரது இந்த பொறுப்பான செயலுக்கு கிராம மக்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com