கடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி

கடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி
கடித்த பாம்பை திரும்ப கடித்து கொன்ற 70 வயது முதியவர் பலி

குஜராத்தில் 70 வயது முதியவர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்து கொன்று விட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் அஜன்வா கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் விளைந்த மக்காசோளத்தை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது பாம்பு ஒன்று அங்கு திடீரென வந்துள்ளது.  இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து தப்பியோடினர்.

ஆனால் பர்வாத் கலா பாரியா என்ற 70 வயது முதியவர் தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன்அனுபவம் உள்ளது என கூறி அங்கேயே நின்றதாக தெரிகிறது. இதையடுத்து அவர் பாம்பை கையில் பிடிக்க முயன்றபோது அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது.  உடனே ஆத்திரமடைந்த பாரியா பதிலுக்கு பாம்பை கடித்து கொன்று விட்டார்.

இதையடுத்து மயக்கமடைந்த பர்வாத் கலா பாரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஷம் ஏறியதில் சிகிச்சை பலனின்றி பர்வாத் உயிரிழந்து விட்டார்.  இதுபற்றி அஜன்வா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com