அமெரிக்கப் பயணத்தின் போது வாரிசு அரசியலை நியாயப்படுத்திப் பேசிய ராகுல் காந்தி கருத்துக்கு ஸ்மிரிதி ராணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தனது அமெரிக்கப் பயணத்தில் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டார். அதில் அவர் வாரிசு அரசியலை ஆதரித்துப் பேசியிருந்தார். அந்தச் செய்தி வெளியான உடனேயே பதிலடி தந்திருக்கிறார் பாஜகவின் மத்திய அமைச்சர் ஸ்மிரிதி ராணி.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ தோல்வி அடைந்த வாரிசு அவர். இன்று தனது தோல்வி அடைந்த அரசியலைப் பற்றி அமெரிக்காவில் பேசியிருக்கிறார். பிரதமர் மோடியின் மதிப்பை குறைக்க வேண்டும் என்பதை ராகுல் காந்தி விரும்புவது வியப்புக்குரியது அல்ல. இது எதிர்பார்த்த ஒன்றுதான். நம் நாட்டு மக்கள் ராகுல் காந்திக்கு ஆதரவளிக்கவில்லை. இதன் காரணமாகவே, தனது அவர் வேதனையை வெளிநாட்டில் வெளிப்படுத்தி இருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார்.